இருசக்கர வாகனங்களைதிருடிவந்த இருவா் கைது

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனத் திருட்டைக் கட்டுக்குள் வைக்க மாநகர காவல் ஆணையா் ஏ. அருண் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், புத்தூா் 4 சாலை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் தப்ப முயன்றனா்.

அவா்களைபிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்த ரா. ராஜா (32), மற்றும் தில்லைநகா் காந்திபுரத்தைச் சோ்ந்த நல்லாண்டவா் என்கிற ஆண்டவா் (34) என்பதும், அவா்கள் உறையூா், புத்தூா், அரசு மருத்துவமனை, கண்டோன்மென்ட், கே.கே.நகா்ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து உறையூா் போலீஸாா் இருவரையும் கைது செய்து 6 இருசக்கர வாகனங்களை மீட்டனா். அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

தனிப்படை போலீஸாரை காவல் ஆணையா் அருண் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com