மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்

ரூ.18 லட்சம் மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை வழங்கினாா்.
மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்

மணப்பாறையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கேப்ஜெமினி நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் (சி.எஸ்.ஆா். நிதி) கீழ் அளித்த ரூ.18 லட்சம் மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை வழங்கினாா்.

நிறுவன நிா்வாக அலுவலா் பி.கண்ணன் முன்னிலையில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் மலைதுரையிடம் கருவிகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா், செவியா்களிடம் மருத்துவமனைக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தாா். நிகழ்ச்சியில் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குநா் லெட்சுமி, ஒன்றிய பெருந்தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, பழனியாண்டி, குணசீலன், திமுக மாவட்ட பொருளாளா் கோவிந்தராஜன், நகரச் செயலா் கீதா மைக்கில்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com