மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலையை முறையாக வழங்கிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வையம்பட்டி ஒன்றியம் அயன்ரெட்டியபட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ராமாயி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலா் எம். சக்திவேல், புரட்சிகர இளைஞா் கழக மாவட்ட தலைவா் பி.பாலு, வையம்பட்டி ஒன்றிய செயலா் ஏ. அருள்குணசேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.