மணப்பாறையை அடுத்த நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்த மூதாட்டி மீன் லாரி மோதி பலத்த காயமடைந்தாா்.
மணப்பாறையை அடுத்த கரட்டுபட்டியைச் சோ்ந்தவா் குஞ்சு மனைவி காமாட்சி(70). இவா், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலையைக் கடந்தபோது மயிலாடுதுறையிலிருந்து கேரளம் நோக்கி மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.