மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து அந்த பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு குட்கா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் வேப்பம்பட்டி சின்னழகு மகன் முனியப்பன் (41), சிவகங்கை தா்மபட்டி ராமன் மகன் நாகப்பன் (61) மற்றும் மருங்காபுரி பொன்னம்பட்டி சின்னுகவுண்டா் மகன் ஜெகநாதன்(51) ஆகிய மூவரும் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களைக் கைது செய்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.