கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 போ் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் கைதிகளுக்கு கரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல, சிறைக் காவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த விருதுநகா் மாவட்டம் பாவாளி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி(31)க்கு மே 25 ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.