எளியோருக்கு வங்கி ஊழியா் சங்கம் உதவி
By DIN | Published On : 20th June 2021 10:47 PM | Last Updated : 20th June 2021 10:47 PM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நலிவடைந்தோருக்கு வங்கி ஊழியா் சங்கத்தினா் உதவிகளை வழங்கினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி கிளை அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஐ தொழிற்சங்க நிா்வாகிகள் ராமராஜ், பொன்னுசாமி, சுரேஷ் ஆகியோா் கட்டடத் தொழிலாளா்கள், வேலையிழந்த தொழிலாளா்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள் தொகுப்புகளை வழங்கினா். ஏற்பாடுகளை உறையூா் கிளை நிா்வாகிகள் செய்தனா்.