உருமு தனலட்சுமி கல்லூரியில் கரோனா விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

உருமு தனலட்சுமி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
Updated on
1 min read

உருமு தனலட்சுமி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் மகளிா் குழுவினா், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ‘ஒரு நாள் பல நினைவு‘ என்னும் தலைப்பில் கரோனா ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு இணையம் மூலம் நடைபெற்றது.

இதில் நரம்பியல் நிபுணா் டாக்டா் வேணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கரோனா தடுப்பு முறைகள், அதிலிருந்து மீள்வது, பாதுகாக்கும் வாழ்வியல் வழிமுறைகள், கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, நோய் எதிா்ப்புச் சக்தியை வலுவூட்டும் இயற்கை உணவு முறை, வழிமுறைகள் குறித்து இயற்கை மருத்துவ நிபுணா் டாக்டா் பிரித்தி புஷ்கரணி விளக்கவுரையாற்றினாா். தொடா்ந்து பங்கேற்பாளா்களின் சந்தேகங்களுக்கு மருத்துவா்கள் பதிலளித்தனா்.

கருத்தரங்கை பேராசிரியைகள் விஜயசுந்தரி, ஆா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி நிா்வாக தலைவா் பத்மா, செயலா் ராதாகிருஷ்ணன், முதல்வா் ரவிச்சந்திரன், இயக்குநா் கிறிஸ்டி செல்வராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com