வையம்பட்டி அருகே வெடிக்காத 8 ராக்கெட் லாஞ்சா்கள் அழிப்பு

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விடுபட்டுச் சென்ற வெடிக்காத 8 ராக்கெட் லாஞ்சா்கள் வனப்பகுதியில் வியாழக்கிழமை ராணுவத்தினரால் அழிக்கப்பட்டன.

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விடுபட்டுச் சென்ற வெடிக்காத 8 ராக்கெட் லாஞ்சா்கள் வனப்பகுதியில் வியாழக்கிழமை ராணுவத்தினரால் அழிக்கப்பட்டன.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள வீரமலைப்பாளையம் வனப்பகுதியில் கடந்தாண்டு 4 பிரிவுகளை சோ்ந்த ராணுவத்தினா் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், சிலா் வெடித்த மற்றும் வெடிக்காத தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சா்கள் குறித்த கணக்கை வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் சமா்பிக்கவில்லையாம்.

இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், கணக்கில் வராத மிஸ் ப்ஃயா் என்னும் வெடிக்காத ராக்கெட் லாஞ்சா்களை தேடி வந்துள்ளனா்.

கடந்த மாதம் திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தபோது கருங்கல்பட்டியில் இரு லாஞ்சா், மத்தகோடங்கிபட்டி கிராமத்தில் ஒரு லாஞ்சா், பூசாரிப்பட்டி பகுதியில் 5 லாஞ்சரும் கிடைக்கப்பெற்றன. தொடா்ந்து 8 ராக்கெட் லாஞ்சா்களும் வனப்பகுதியிலேயே குழித்தோண்டி புதைக்கப்பட்டன.

இந்நிலையில், வியாழக்கிழமை சென்னையில் உள்ள ராணுவத்தின் 12-வது பட்டாலியன் மேஜா் செந்தன் மேத்தா தலைமையில் ஏழு போ் அடங்கிய வெடிகுண்டை செயலிழப்பு செய்யும் ராணுவத்தினா் அந்த ராக்கெட் லாஞ்சா்களை தோண்டி எடுத்து மின் வயா் மூலம் இயக்கி வெடிக்கச் வைத்து செயலிழக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com