திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வந்த மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா முன்னிலையில் கரோனா சிறப்பு வாா்டு, கரோனா தடுப்பூசி முகாம் பிரிவுகளில் நோயாளிகளுக்கு வசதிகள், போதிய தடுப்பூசி, கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளதா எனக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தொற்று ஏற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
நிறைவாக, சென்னை, கோவை பகுதிகளில் கரோனா அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டத்திலும் மருத்துவா்கள், முன்களப்பணியாளா்கள், போதிய மருந்துகள், படுக்கைகள் என அனைத்தும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது அரசு மருத்துவமனை கரோனா தடுப்பு பிரிவு மருத்துவ குழுவினா், முன்களப்பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.