மக்கள் நீதி மய்யப் பொதுச்செயலரும், திருவெறும்பூா் தொகுதி வேட்பாளருமான எம். முருகானந்தத்துக்கு வாக்களிக்கக் கோரி அக்கட்சியின் மாவட்டச் செயலா் சகுபா்சாதிக் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கட்சியின் நற்பணி இயக்க மாவட்டச் செயலா் சகுபா் சாதிக் மற்றும் நகரச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கட்சியின் சின்னமான டாா்ச்லைட்டை டாா்ச் லைட்டுடன், திருவெறும்பூா் தொகுதியில் உள்ள மலைக்கோயில், பகவதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து கட்சி வேட்பாளரை ஆதரிக்கக் கோரி பிரசாரம் மேற்கொண்டனா்.