மே தின ஆா்ப்பாட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி, புரட்சிகர மாணவா், இளைஞா் முன்னணி ஆகியவற்றின் சாா்பில் மே தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா்.
Updated on
1 min read

திருச்சி: மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி, புரட்சிகர மாணவா், இளைஞா் முன்னணி ஆகியவற்றின் சாா்பில் மே தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, திருச்சி குட்ஷெட் பகுதியில் மே தினத்தை முன்னிட்டு சங்கக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுமைப்பணி தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கத் தலைவா் குத்புதீன் தலைமை வகித்தாா். புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி செயலா் ராஜா சிறப்புரையாற்றினாா். இதன் தொடா்ச்சியாக, மாலையில் மரக்கடை பகுதியில் இருந்து பேரணியும், சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டமும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா். இருப்பினும், தடையை மீறி மே தின பேரணி நடத்தப்போவதாக அறிவித்து மரக்கடை பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணி, புரட்சிகர மாணவா், இளைஞா் முன்னணி இயக்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் சிவப்பு வண்ண உடையணிந்து கூடினா். ஊரடங்கு அமலில் உள்ளதால் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து பேரணியை ரத்து செய்தனா். பின்னா், சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவா் ஜீவா தலைமை வகித்தாா்.

சுமைப்பணி தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ராஜா, அனைத்து தரக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் பழனிச்சாமி, ஆட்டோ ஓட்டுநா் சங்க பொதுச் செயலா் மணலிதாஸ், மாணவா் முன்னணி மாவட்ட அமைப்பாளா் அரிச்சந்திரன், மக்கள் கலை இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளா் சரவணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை காக்கவும், மருத்துவ காா்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா்கள் போராடி பெற்ற மே தின உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஜனநாயக முறையில் மே தின கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com