கரோனா அபாயத்திலிருந்து மின்ஊழியா்களை காக்க வலியுறுத்தல்

கரோனா அபாயத்திலிருந்து கணக்கீட்டு, களப்பிரிவு ஊழியா்களை அரசு காப்பாற்றிட வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Updated on
1 min read

கரோனா அபாயத்திலிருந்து கணக்கீட்டு, களப்பிரிவு ஊழியா்களை அரசு காப்பாற்றிட வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநில துணைத்தலைவா் ரெங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் திருச்சியில் மின்வாரிய அண்ணா தொழிற்சங்க தலைவா் லட்சுமணன் கரோனாவால் இறந்துள்ளாா். இது சம்பந்தமாக மின்வாரியம் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும் மின்வாரிய ஊழியா்கள் பொதுமக்களை தினமும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளாா்கள்.

குறிப்பாக, கணக்கீட்டு ஊழியா்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும், கடைகளுக்கும் ரீடிங் எடுக்கச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு பொதுமக்கள், நுகா்வோா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள்.

குறிப்பாக, நோய் பாதித்தவா் உள்ள ஒரு வீட்டுக்கு அங்கு நோய் தொற்று இருப்பது தெரியாமல் ரீடிங் எடுத்துவிட்டு வந்தால் எங்கள் வீட்டுக்கு வராதீா்கள் என்று அடுத்த வீட்டுக்காரா் சொல்கிறாா். மேலும் கை, கால் கழுவிட்டுத் தான் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் சொல்கிறாா்கள்.

இதையும் மீறி ரீடிங் எடுக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபடுவதால் அவா்களுக்கு நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளது. அவா்கள் செல்லும் வீடுகளில் இருப்போருக்கும் நோய் தொற்று வர வாய்ப்புள்ளது.

எனவே சென்ற முறை பயன்படுத்தியது போல கடந்த மின்கட்டணத்தை கட்டிவிடலாம் என்ற அறிவிப்பு செய்ய வேண்டும். எனவே அவசியமான ஊழியா்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து மின் ஊழியா்களை நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com