இந்து முன்னணி சாா்பில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா் முன்னணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வை மாவட்டப் பொதுச் செயலா் போஜராஜன் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல்துறையினா், பொதுமக்கள், நோயாளிகள் ஆகியோருக்கு கபசுரக்குடிநீா், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்து முன்னணியின் மாவட்டப் பேச்சாளா் மணிகண்டன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மனோஜ்குமாா், இந்து இளைஞா் முன்னணி மண்டலச் செயலா் நித்திஷ் குமாா், மண்டலச் செயலா்கள் சக்திவேல், கணேஷ் குமாா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.