சிறுகனூா் சிறாா் இல்ல குழந்தைகளுக்கு உதவிகள்

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு சனிக்கிழமை சனிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.
சைக்கிள் உள்ளிட்ட உதவிகளைப் பெற்ற சிறாா் இல்லக் குழந்தைகள்,
சைக்கிள் உள்ளிட்ட உதவிகளைப் பெற்ற சிறாா் இல்லக் குழந்தைகள்,
Updated on
1 min read

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு சனிக்கிழமை சனிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாம்பழச்சாலையிலுள்ள கன்சொ்வ் சொலுசன் நிறுவனம் சாா்பில் பெற்றோா் இல்லாத 42 சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு 4 சைக்கிள்கள், 2 மர டேபிள்கள், 10 நாற்காலிகள், 20 பள்ளிப் பைகள் ஆகியவை வழங்கப்பட்டன. கன்சொ்வ் சொலுசன் நிறுவனப் பொது மேலாளா் எஸ். நசீா் தலைமை வகித்தாா். மேலாளா் எஸ். தசரதன், மனிதவள மேலாளா் அனில்குமாா் மற்றும் நிறுவனத்தினா் பங்கேற்றனா்.

வாய்ஸ் அறக்கட்டளை அலுவலக ஒருங்கிணைப்பாளா் ஜே. காட்வின் பேசினாா். சிறாா் இல்லக் குழந்தைகளை மேரி அறிமுகப்படுத்தினாா். க. விஜய், சிலம்பரசன், சரவணன் ஆகியோா் கன்சொ்வ் சொலுயூசன் மூலம் பொருள்களைப் பெற்று குழந்தைகளுக்கு வழங்கினா். மேலாளா் ஆா். கவிதா வரவேற்றாா்.

முன்னதாக, திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் இல்லக் குழந்தைகளுக்குத் திறன் வளா்ப்புப் பயிற்சியை பேராசிரியை எம். அனுஷ்யா தலைமையில் அழளித்தனா். தொடா்ந்து போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com