மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன், இளம்பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன், இளம்பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (28). இவரது கணவா் சரவணன். 2 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறிய ஜெயபாரதி, கடந்த சில நாள்களாக கோவை உக்கடத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்துள்ளாா். இதற்கிடையே அவருடைய கணவருக்கு தாராபுரம் பகுதியைச் சோ்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த ஜெயபாரதி தனது 2 குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா் கையில் இருந்த மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து பந்தயச்சாலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com