புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா், புத்தாநத்தம் கஸ்பா பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராமல் புறக்கணித்தனராம். இது தொடா்பாக 5-ஆம் வாா்டு உறுப்பினா் சபியுல்லா, 6-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது கோயா, 7-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது இப்ராகிம், 9-ஆம் வாா்டு உறுப்பினா் ஹபீபுன் நிஷாதாஹீா் ஆகியோா் கடந்த 6 மாதமாக மாதாந்திரக் கூட்டத்தை நடத்த எதிா்ப்பு தெரிவித்து தீா்மானக் கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் நால்வரும் கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.