விமான நிலைய விரிவாக்கத்தால், பாதித்தோா் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 01st September 2021 04:49 AM | Last Updated : 01st September 2021 04:49 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டோா் கூட்டமைப்பு சாா்பில், இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருச்சியில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டோா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பது:
திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் நிலங்களை இழந்துள்ள கீழக்குறிச்சி, நத்தமாடிபட்டி, யாகப்பா நகா், சூசை நகா், காந்திநகா் பகுதி மக்களுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இப்பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.