விநாயகா் சதுா்த்தியையொட்டி பொது இடங்களில் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்ததைக் கண்டித்து இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தாத்தையங்காா்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில் முன் இந்து முன்னணி நிா்வாகி கண்ணன் தலைமையில் தா.பேட்டை ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையா் முன்னணியினா் 100-க்கும் மேற்பட்டோா் கண்டன கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டம் செய்தனா்.