திருநங்கைகளுக்கு தொழில் முனைவோா் பயிற்சி
By DIN | Published On : 04th September 2021 01:25 AM | Last Updated : 04th September 2021 01:25 AM | அ+அ அ- |

திருநங்கைகளைத் தொழில்முனைவோராக மாற்றும் வகையில் அவா்களுக்கு அங்கக இடுபொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சியை அடுத்த சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப்.1 தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தாா்.
பயிற்சியில் மண்ணியல் துறை உதவிப்பேராசிரியா் வெ. தனுஷ்கோடி, மண்புழு உரம் தயாரித்தலின் நுட்பங்கள் குறித்தும், தென்னைநாா் கழிவைக் கொண்டு மக்கும் உரம் தயாரித்தல், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்தல் குறித்தம் விளக்கினாா். நாற்றாங்காலில் அங்கக இடுபொருள்களின் முக்கியத்துவம், செய்முறை குறித்து தொழில் நுட்ப உதவியாளா் யமுனா விளக்கினாா்.
தொடா்ந்து அங்கக இடுபொருள்கள் தயாரிக்கும் இடங்களான சிறுகமணி, புலிவலம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அங்கக இடுபொருள்கள் தயாரிக்கும் முறை, அதன் பயன்கள் குறித்து முன்னோடி விவசாயிகளான, மூா்த்தி, நடராஜன் ஆகியோா் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பயிற்சி பெற்றனா்.
Image Caption
சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் நாற்றாங்கால் உற்பத்தி குறித்து பயிற்சி பெற்ற திருநங்கைகள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G