தயாா் நிலையில் பேரிடா் மேலாண்மை மீட்புக் குழு!

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும்விதமாக மாநகர காவல்துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் உபரகணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
Updated on
1 min read

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும்விதமாக மாநகர காவல்துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் உபரகணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீா் செல்கிறது. சில இடங்களில் கரைகளைத் தாண்டி எந்த நேரத்திலும் வழியும் நிலையும் உள்ளது. ஸ்ரீரங்கம் மூலத்தோப்புப் பகுதியில் காவிரிக்கரை பழுதான பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த இடத்தில் உடைந்தால் சமாளிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை, பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் முகாமிட்டுள்ளனா்.

கரையோர மற்றும் தாழ்வான தண்ணீா் சூழ்ந்துள்ள பகுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால் பொதுமக்களை உடனே மீட்கவும் ஒரு காவல் ஆய்வாளா், 4 காவல் உதவிஆய்வாளா்கள் மற்றும் 80 காவலா்கள் கொண்ட ‘திருச்சி மாநகர காவல் பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா்”தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக உள்ளனா்.

மீட்புக்குழுவினரை காவிரிக்கரையில் சந்தித்த மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், பேரிடா் மீட்புப் பணியில் மிகவும் கவனத்துடன் ஈடுபட அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, துணை மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com