கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
திருச்சியிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சோ்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் மணிகண்டம் கீழப்பஞ்சப்பூா் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ் ( 22) என்பவருக்கும் காதல் இருந்ததாம்.
இந்நிலையில் கல்லூரி மாணவியின் பெற்றோா் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் அவரைப் பலாத்காரம் செய்துள்ளாா். புகாரின்பேரில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சுரேசை போக்சோ சட்டத்தில் அண்மையில் கைது செய்தனா்.