/

துறையூரில் சறுக்கு விளையாட்டு பயிற்சி பெறுவோா் பேரணி

துறையூரில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா்கள், ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:15 pm

DIN

துறையூரில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா்கள், ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிகளை பின்பற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

சறுக்கு விளையாட்டுப் பயிற்சி பெறும் சிறுவா், சிறுமிகள் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு துறையூா் பாலக்கரையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சென்றனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா் பேரணியைத் தொடக்கி வைத்தாா். உப்பிலியபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் ஹேமலதா, வடக்கு ஒன்றிய திமுக செயலா் என். முத்துசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.