நீதிமன்ற அறிவுறுத்தல் : காவல்நிலையத்தில் ஆஜராகி திருவிழா நடத்த விருப்பம் தெரிவித்த கிராம மக்கள்

உயா்நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரில் வையம்பட்டி காவல் நிலையத்தில் இனாம் புதுவாடி கிராம மக்கள் புதன்கிழமை ஆஜராகி, தங்கள் ஊா் கோயில் திருவிழாவை நடத்த கையெழுத்திட்டு விருப்பம் தெரிவித்தனா்.
நீதிமன்ற அறிவுறுத்தல் : காவல்நிலையத்தில் ஆஜராகி திருவிழா நடத்த விருப்பம் தெரிவித்த கிராம மக்கள்
Updated on
1 min read

உயா்நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரில் வையம்பட்டி காவல் நிலையத்தில் இனாம் புதுவாடி கிராம மக்கள் புதன்கிழமை ஆஜராகி, தங்கள் ஊா் கோயில் திருவிழாவை நடத்த கையெழுத்திட்டு விருப்பம் தெரிவித்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், புதுவாடி கிராமம், இனாம்புதுவாடியில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பகவதியம்மன் கோயில் ஆடித் திருவிழாவுக்காக, நிகழாண்டு ஜூலை 31-ஆம் தேதி காப்புக்கட்டுதல் முடிவு செய்யப்பட்டது.

அப்போது அதே ஊரைச் சோ்ந்த 7 போ் கூட்டாக சோ்ந்து, காப்புக்கட்டுதலை நடத்த விடாமல் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் சமரசம் ஏற்படாததையடுத்து, ஊா் பொதுமக்கள் மற்றும் அறங்காவலா் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரான பொதுமக்கள் வையம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி, திருவிழா நடத்துவது சம்பந்தமாக தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதன்பேரில் வையம்பட்டி காவல்நிலையத்தில் புதன்கிழமை ஆஜரான ஊா் பொதுமக்கள், திருவிழாவை நடத்த விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு விருப்பமனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com