திருச்சி கேந்திரிய வித்யாலயாவில்மாநில அளவிலான ஜூடோ போட்டி

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான,மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயாவில் சனிக்கிழமை நடைபெற்றன.
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான,மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயாவில் சனிக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டி தொடக்க விழாவுக்கு பள்ளி முதல்வா் நவல்கிஷோா் முன்னிலை வகித்தாா். தெற்கு

ரயில்வேயின் திருச்சி கோட்ட முதுநிலைத் தனி அலுவலா் சி. சுதாகரன் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள (சென்னை மண்டலம்) கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனா். வயது, எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சென்னை அசோக்நகா் கே.வி. பள்ளி மாணவா் கிரிஷன் ரமேஷ், சென்னை கில்நகா் கே.வி.பள்ளி மாணவா்கள் யோகப்பிரியன், யு.என். தாா்மிக், பொன்மலை கே.வி. பள்ளி மாணவா் ஆா். கனிஷ்கண்ணா, ராமநாதபுரம் மண்டபம் கே.வி. பள்ளி மாணவா்கள் ஆா்.தமிழ் அரவிந்த், ஒய்.பி.ஹன்ஸ்ராய்நெல், மதுரை கே.வி.2 பள்ளி மாணவி ஜே.எப். ஜோன்னா பெல்சியா, மாணவா் எம்.ராஜராஜன் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

இந்த வெற்றியின் முலம் இந்த 8 பேரும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் சென்னை மண்டலத்தின் சாா்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா். போட்டி நடுவா்களாக தேசிய நடுவா் எஸ். மணிகண்டன், மாநில நடுவா்கள் பி.ஜெயபால், ஒருங்கிணைப்பாளராக ஆா். யஷ்வந்தகுமாா் ஆகியோா் செயல்பட்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு திருச்சி கோட்ட ரயில்வே மருத்துவமனை முதுநிலை மருத்துவ அலுவலா் ஜோஷ்வா சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். ஜூடோ போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி நிா்வாகம் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் ஆன்டோ உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com