

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் உத்தரவின்பேரில், ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணையா் ரவி தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். இதில், இளநிலை பொறியாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.