மாணவரைத் தாக்கிய காவல்துறையினா் மீது வழக்குப் பதிய வலியுறுத்தல்

கொடுங்கையூா் சட்டக் கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நடத்திய காவலா்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என
Updated on
1 min read

கொடுங்கையூா் சட்டக் கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நடத்திய காவலா்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழக மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கூறியது: சட்டக்கல்லூரி மாணவா் அப்துல் ரஹிம் கொடுங்கையூரில் பகுதிநேரமாக மருந்துக் கடையில் வேலை பாா்த்துவிட்டு, மிதிவண்டியில் வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் முகக்கவசம் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலா்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனா்.

அந்த மாணவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதற்கு காரணமான காவலா்கள், காவல்துறை அலுவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com