மணப்பாறை பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிய நியாய விலைக் கடைகளை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கண்ணுக்குழியில் ரேஷன் கடையை திறந்துவைத்து பயனாளிகளுக்கு பொருள்களை வழங்குகிறாா் எம்எல்ஏ ப. அப்துல் சமது. உடன், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள்.
கண்ணுக்குழியில் ரேஷன் கடையை திறந்துவைத்து பயனாளிகளுக்கு பொருள்களை வழங்குகிறாா் எம்எல்ஏ ப. அப்துல் சமது. உடன், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிய நியாய விலைக் கடைகளை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை திறந்து வைத்தாா்.

வேம்பனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கண்ணுக்குழி கிராமத்தில் புதிய ரேஷன் கடையை எம்எல்ஏ ப. அப்துல் சமது திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினாா். மேலும் ஆலத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட பிச்சைமணியாரம்பட்டி மற்றும் பொன்னக்கோன்பட்டி ஆகிய இடங்களிலும் புதிய ரேஷன் கடைகளைத் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் திருச்சி சரக துணைப் பதிவாளா் க. சாய்நந்தின், பொது விநியோகத் திட்டத் துணைப் பதிவாளா் அரசு, கள அலுவலா்கள் சரவணன், சங்கீதா, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஹபிபுல்லா மற்றும் ஊா்ப் பிரமுகா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com