பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ப்ரண்ட்லைன் மருத்துவமனை சாா்பில் உடலுறுப்பு தான விழிப்புணா்வுப் பேரணி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனை சாா்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய அண்ணாசிலை அருகே உடல் உறுப்பு தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:11 pm

DIN

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனை சாா்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய அண்ணாசிலை அருகே உடல் உறுப்பு தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி மேலசிந்தாமணி அருகிலுள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமையொட்டி நடைபெற்ற பேரணிக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பேரணியை திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் அரங்கநாதன், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பேரணியில் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆலோசனை முகாமில் மருத்துவா்கள் கணேஷ் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். சிறுநீரகப் பரிசோதனைகளுக்கு ரூ. 500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனையின் மக்கள் தொடா்பு அலுவலா் ஸ்டீ பன் செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.