டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் கிராம சபை கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:08 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருள் குறித்து அதிகாரிகள் கூறிய பின்னர்,  மக்களின் தங்கள் கோரிக்கை குறித்த கேள்விகளை கேட்குமாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

இதையடுத்து மக்கள் தங்கள் பகுதியில் சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி, முதியோர் உதவித் தொகை, பேருந்து நிறுத்தம், பேருந்து வசதி, நெல் கொள்முதல் நிலையம் என அடுக்கடுக்கான கேள்விகளை தொடர்ந்து கேட்டனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு ஒவ்வொரு மக்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கூறியதுடன் மக்களின் கோரிக்கை குறித்து விரைந்து பரீசிலித்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் பேருந்துகள் அனைத்தும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு, நகைச்சுவையாக பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு பழனியில் இருந்து செல்லும் பேருந்தை எப்படியா நிறுத்த முடியும், நான் அந்த துறையின் அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்தேன். அப்படி பழனி செல்லும் பேருந்தை நிறுத்த சொன்னால் பேருந்தில் இருக்கும் பயணிகள் இப்படி எல்லா இடத்திலும் நின்று போகுது கட்ட வண்டியா என்று கேட்பார்கள் என்று நகைச்சுவையாக கூறி கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

முன்னதாக கிராம சபை கூட்டத்தில் கே.உடையாபட்டியைச் சேர்ந்த என்ற மாற்றுத்திறனாளி சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கிராம சபை கூட்டத்தில் தவழ்ந்து வந்த மாற்றுத் திறனாளி தனக்கு 3 சக்கர வாகனம் வழங்குவதாக அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையை பகிர்ந்தார். இதைக் கேட்ட அமைச்சர் கே.என்.நேரு ஓரிரு தினங்களின் வழங்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.