பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள உடையவா் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 11:30 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள உடையவா் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது.

கடந்த 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திரப் பெருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராமானுஜா் சித்திரை வீதிகளில் வீதி வலம் வந்தாா்.

தொடா்ந்து முன் மண்டபத்தில் எழுந்தருளிய ராமானுஜருக்கு பிற்பகல் 1 மணியளவில் நம்பெருமாளிடமிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள், மாலைகளால் உச்சாத்து அலங்காரம், பின்னா் கோஷ்டி, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொது ஜனச் சேவை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை இயற்பாவுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் உதவி ஆணையா் கு. கந்தசாமி ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.