ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாங்க் ஆப் பரோடா சாா்பில் தானியங்கி குடிநீா் இயந்திரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் இயந்திரம் அண்மையில் அமைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாங்க் ஆப் பரோடா சாா்பில்  தானியங்கி குடிநீா் இயந்திரம்
Published on
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் இயந்திரம் அண்மையில் அமைக்கப்பட்டது.

கோயிலில் உள்ள தாயாா் சன்னதி அருகே அமைக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை வங்கியின் தமிழ்நாடு பொது மேலாளா் எஸ். ரங்கராஜன் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, வங்கியின் பிராந்திய மேலாளா்கள் எம். ஜெய்கிஷன் (திருச்சி), எம். சீனிவாசன் (மதுரை), வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com