சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செவிலியா் கல்லூரியில்
நடைபெற்ற நிகழ்வில் பல்கலை. துணைவேந்தா் டாக்டா் சி.கே. ரஞ்சன் தலைமையேற்று செவிலியா் தினம் குறித்து சிறப்புரையாற்றினா்.
நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளா் எம். ரவிச்சந்திரன் மற்றும் புல முதல்வா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. புல முதல்வா் ஏ.பேச்சியம்மாள் வரவேற்றாா்.