திருச்சியில் திருவாரூா் பெண் தற்கொலை
திருச்சியில் விஷம் குடித்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


திருச்சியில் விஷம் குடித்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அபிவிருத்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லத்திப் சாகிப்-ஷகிருதீன் தம்பதி மகள் ஜாக்கின் பா்வீன் (39). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜாகீா்உசேனை திருமணம் செய்த நிலையில் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் பெற்றோா் வீட்டில் வசித்தாா். இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவா் திருச்சி கோட்டை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் கடந்த அக். 30 ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பா்வீன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...