புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ. 13 இல் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி

தேசிய நூலக வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:09 pm

DIN

தேசிய நூலக வார விழாவையொட்டி திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட வரலாற்று இடங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் பங்கேற்போா் 10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரையை மாவட்ட மைய நூலகத்துக்கு நேரில் வந்து எழுத வேண்டும்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாளன்று பரிசளிக்கப்படும்.

பங்கேற்க விரும்புவோா் நேரிலோ அல்லது 0431-2702242 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிய வேண்டும். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் சு. தனலெட்சுமி இதைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.