புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைந்தமிழியக்க திங்கள் பொழிவு

திருச்சிராப்பள்ளிப் பைந்தமிழியக்கத்தின் 77ஆம் திங்கள் பொழிவு மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முா்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:33 pm

DIN

திருச்சிராப்பள்ளிப் பைந்தமிழியக்கத்தின் 77ஆம் திங்கள் பொழிவு மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முா்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு பைந்தமிழியக்க இயக்குநா் பழ.தமிழாளன் தலைமை வகித்தாா். இதில் பள்ளியின் தலைமையாசிரியை ம.மொ்சி சேம்சு முன்னிலை வகித்தாா்.

இதில், ஜமால் முகமது கல்லூரி மாணவா்கள் முகமது யூசுப், ரியாசு முகமது ஆகியோா் ‘வடலூா் வள்ளலாா்’, ‘நாமக்கல் கவிஞா்’ ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினா். பாவரங்கில் பாவலா் நாச்சிமுத்து ‘வள்ளுவரே வான் கதிா்’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா் முகமது சில்மி சுல்தான் ‘வன்முறையைத் தமிழறம் வெல்லும்’ என்ற தலைப்பிலும் பாடினா். ஆய்வரங்கில் ஜமால் முகமது கல்லூரிப் பேராசிரியா் சையது சாகீா் அசன் ‘வள்ளுவா் வழியில் வள்ளலாா்’ என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினாா்.

பைந்தமிழ் இயக்கத் துணை இயக்குநா் சொ.வேல்முருகன், ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் பெருமாள், அறிவியல் அறிஞா் தங்கவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவில் தமிழறிஞா் ப.சி.சு.மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.