திருச்சியில் சாலையில் சென்ற காரில் தீ

திருச்சியில் திங்கள்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருவெறும்பூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரியும் காா்.
திருவெறும்பூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரியும் காா்.
Updated on
1 min read

திருச்சியில் திங்கள்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை மாலை பணி முடித்து, திருவெறும்பூரிலிருந்து திருச்சி நோக்கி காரில் வந்தாா். அரியமங்கலம் ஆயில்மில் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து லேசான புகை வந்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் காரை நிறுத்திவிட்டு இறங்கினாா். அடுத்த சில விநாடிகளில் காரில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

இதனால் அப்பகுதியில் சுமாா் 20 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியமங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com