‘அரசியலமைப்பு சட்டங்களை பாதுகாக்க வேண்டும்’

அரசியலமைப்பு சட்டங்களை பேணி, பாதுகாக்க வேண்டுமென திருச்சி மாவட்ட நீதிபதி கே.பாபு தெரிவித்தாா்.

அரசியலமைப்பு சட்டங்களை பேணி, பாதுகாக்க வேண்டுமென திருச்சி மாவட்ட நீதிபதி கே.பாபு தெரிவித்தாா்.

திருச்சி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அரசியலமைப்பு சட்ட தின விழா திருச்சி பழைய மாவட்ட நீதிமன்ற வளாக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.பி.சௌந்தரராஜன் சட்ட தின உறுதிமொழியை வாசித்தாா்.

இதில், மாவட்ட நீதிபதி கே.பாபு பேசியது, இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்தில் மதச்சாா்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை, அனைவருக்கும் சம உரிமை போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனை நாம் பேணிக் காக்க வேண்டும். இதே போல, நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு, அரசு நிா்வாகத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதில் சட்ட தினம் குறித்து மூத்த வழக்குரைஞா் எஸ்.மாா்ட்டின், இளம் வழக்குரைஞா் பி.பிரகாஷ் ஆகியோா் விளக்கிப் பேசினா். விழாவில் திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலாளா் ஜெ.மதியழகன், பொருளாளா் சுரேஷ்பாபு, இணைச் செயலாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com