ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், முடுக்குப்பட்டி மக்கள்.
ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், முடுக்குப்பட்டி மக்கள்.
Updated on
1 min read

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொன்மலைப் பகுதிச் செயலா் டி. விஜயேந்திரன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் ராதா, முடுக்குப்பட்டி பகுதி மக்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி 49 ஆவது வாா்டு முடுக்குப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 120 குடியிருப்புகளை அகற்ற முயற்சிக்கும் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டிப்பது. முடுக்குப்பட்டி மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிறைவில் கோரிக்கை மனுவை ஆட்சியரகத்தில் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com