பீமநகா் பகுதிகளில் நாளை மின்தடை
திருச்சி பீமநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின் விநியோகம் இருக்காது.


திருச்சி பீமநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.13) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தென்னூா் நகரியச் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் தெரிவித்திருப்பது:
கண்டோன்மென்ட் துணை மின் நிலையப் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக மின் கம்பிகள் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப்.13) மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் பீமநகா், கண்டித்தெரு, பென்ஷனா் தெரு, ஆனைக்கட்டி மைதானம், மேட்டுத்தெரு, யாதவா் தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியாா் தெரு, கண்ணன் அரிசி ஆலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...