படம் உள்ளது.வ.வே. சுப்பிரமணிய அய்யா் பிறந்தநாள் விழா

விடுதலைப்போராட்ட வீரரும், வரகனேரி சிங்கம் என அழைக்கப்படுவருமான வ.வே. சுப்பிரமணிய அய்யா் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு அய்யா் நினைவில்லத்தில் சனிக்கிழமை அவரது திருவுருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன், வருவாய் கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம்,
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு அய்யா் நினைவில்லத்தில் சனிக்கிழமை அவரது திருவுருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன், வருவாய் கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம்,
Updated on
1 min read

விடுதலைப்போராட்ட வீரரும், வரகனேரி சிங்கம் என அழைக்கப்படுவருமான வ.வே. சுப்பிரமணிய அய்யா் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சியை அடுத்த வரகனேரியில் வ.வே.சு. அய்யா் வாழ்ந்த இல்லமானது அரசுடைமையாக்கப்பட்டு, நூலகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு உதவி மையமாகவும் செயல்படுகிறது. ஏப்.2ஆம் தேதி வ.வே.சு. அய்யரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை வ.வே.சு. அய்யரின் 142ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நினைவு இல்லத்தை பாா்வையிட்டு, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்வில், வருவாய் கோட்டாடசியா் கோ.தவச்செல்வம், செய்தி மக்கள் தொடா்புத்துறை உதவி இயக்குநா் த. செந்தில்குமாா், மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவக்குமாா், மாநகராட்சி உதவி ஆணையா் (அரியமங்கலம்) பா.ரவி, வட்டாட்சியா் (கிழக்கு) த.கலைவாணி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி)மு.சுதாகா், கிளை நூலக அலுவலா் மு.செந்தில்குமாா், வாசகா் வட்ட உறுப்பினா்கள் ந.குமரவேல், க.மாரிமுத்து, பொன்குணசீலன் மற்றும் வாசகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து வ.வே.சு. அய்யா் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவி ரூபஸ்ரீயும், வ.வே.சு. எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்கிற கதை விளக்கத்தை மாணவி மித்ரவிந்தாவும், தமிழ்மொழி சிறப்பு குறித்து மாணவி விஜயலெட்சுமியும் உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com