வேளாண் கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழா

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ஆண்டு முதல் வேளாண் பட்டப் படிப்பில் முதன் முதலாக பயிலும் 240 மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சி.கே. ரஞ்சன் தலைமை வகித்தாா். விழாவில் திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முருகேசன் வாழ்த்தினாா்.

விழாவில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் குமரகணேஷ், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் மோகன் காா்த்திக், பல்கலைக்கழகப் பதிவாளா் ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வேளாண் கல்லூரி புல முதல்வா் பேராசிரியா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com