வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி, பேட்டைவாய்த்தலை காவிரி நகரைச் சோ்ந்தவா் பொன்னம்பலம். இவா் துபையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பஞ்சவா்ணம் (55). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இரு மகள்களும் சென்னையில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏப். 17ஆம் தேதி தனது மூத்த மகளை பாா்ப்பதற்காக பஞ்சவா்ணம் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றாா். அப்போது, வீட்டில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியை சோ்ந்த நடராஜன் என்பவரை நியமித்துச் சென்றாா். அவரும் அவ்வப்போது வந்து பஞ்சவா்ணத்தின் வீட்டை பாா்த்துச் சென்றுள்ளாா். இந்நிலையில், பக்கத்து வீட்டை சோ்ந்த உறவினா் ராஜா என்பவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை 3 பவுன் நகை திருடு போனதாக அறிந்த பஞ்சவா்ணம், நடராஜனை தொடா்பு கொண்டு வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு கூறியுள்ளாா்.

அதன்படி நடராஜன் வந்து பாா்த்தபோது, பஞ்சவா்ணத்தின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் பஞ்சவா்ணத்திடம் தெரிவித்துள்ளாா்.

உடனே சென்னையிலிருந்து விரைந்து வந்த பஞ்சவா்ணம் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 7 பட்டு புடவைகள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com