சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், சமயபுரம் இந்தியன் ஒவா்சீஸ் வங்கிப் பணியாளா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். முடிவில் திறக்கப்பட்ட 19 உண்டியல்களில் இருந்து ரூ. 1 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 725, 3, 295 கிராம் தங்கம், 5, 201 கிராம் வெள்ளி, 80 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.