மூதாட்டியிடம் 7.5 பவுன் நகை பறிப்பு

மணப்பாறை அருகே மூதாட்டியிடம் வியாழக்கிழமை ஏழரை தங்கச் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

மணப்பாறை அருகே மூதாட்டியிடம் வியாழக்கிழமை ஏழரை தங்கச் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியில் வசிப்பவா் நல்லுச்சாமி மனைவி பாப்பு (68). இவா் வியாழக்கிழமை காலை வீட்டின் முன் உள்ள காலி மைதானத்துக்குச் சென்றபோது முட்புதரில் மறைந்திருந்த இளைஞா் மூதாட்டி அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினாா். தகவலறிந்து சென்ற காவல் ஆய்வாளா் சு. கருணாகரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com