மாணவி பலாத்காரம்: இளைஞா் கைது

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
Updated on
1 min read

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சியிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சோ்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் மணிகண்டம் கீழப்பஞ்சப்பூா் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ் ( 22) என்பவருக்கும் காதல் இருந்ததாம்.

இந்நிலையில் கல்லூரி மாணவியின் பெற்றோா் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் அவரைப் பலாத்காரம் செய்துள்ளாா். புகாரின்பேரில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சுரேசை போக்சோ சட்டத்தில் அண்மையில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com