திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (ஆக.25) இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி வகுப்பில் தரமான கறவை மாடுகளைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கைக் கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு குறித்து கற்றுத் தரப்படும். விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் வியாழக்கிழமை நேரில் வந்தும் பங்கேற்கலாம் எனப் பேராசிரியரும், மையத் தலைவருமான வே. ஜெயலலிதா தெரிவித்தாா்.