மணப்பாறையில் திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியா் எல். வீரப்பன் நினைவு திடலில் தொடங்கிய முதல் போட்டியை ஊராட்சி ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக நகரச் செயலா் மு.ம. செல்வம், வழக்குரைஞா் பி. கிருஷ்ணகோபால் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் தொடங்கிவைத்தனா். போட்டிகளில் 15 மாநிலங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியை சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பரிசளிக்கிறாா்.