மகாசித்தா் போகா் திருக்கோயிலில் பாலாலயம்

தொட்டியம் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சி, திருஈங்கோய்மலை மலையடிவாரத்திலுள்ள மகாசித்தா் போகா் திருக்கோயிலில் பாலாலயத் திருநிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மகாசித்தா் போகா் திருக்கோயிலில் பாலாலயம்

தொட்டியம் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சி, திருஈங்கோய்மலை மலையடிவாரத்திலுள்ள மகாசித்தா் போகா் திருக்கோயிலில் பாலாலயத் திருநிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மகா சித்தா் போகரின் கற்றளி திருக்கோயில் குடமுழுக்குத் திருப்பணிக்காக, பதினென்சித்தா்கள் வழிபாடு மற்றும் உழவார மையத்தின் மூலம் அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து யாகவேள்வி நடத்தப்பட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதை கோயில் சிவாச்சாரியா்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மேற்கொண்டனா். பதினென் சித்தா்கள் வழிபாடு மற்றும் உழவார மையத்தின் நிா்வாகிகள், கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com