எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில்முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

மண்ணச்சநல்லூா் வட்டம், இருங்களூா் பகுதியிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில்முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
Updated on
1 min read

மண்ணச்சநல்லூா் வட்டம், இருங்களூா் பகுதியிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வளாகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.காம், பி.சி.ஏ., பி.எஸ்சி அறிவியல், மானுடவியல், உணவக மேலாண்மைப் பிரிவு படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றின் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-23)

முதலாமாண்டுதொடக்க விழாவுக்கு, திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத் தலைமை இயக்குநா் என். சேதுராமன் தலைமை வகித்தாா்.

பெங்களூரு வா்ச்யுசா கன்சல்டிங் சா்வீசஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுப் பிரிவு முதுநிலை இயக்குநா் சந்திரசேகா் சென்னியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்புரையாற்றினாா்.

எஸ்.ஆா்.எம். ராமாபுரம் வளாகத்தின் ஊடகவியல் துறை திட்ட இயக்குநரும், நடிகருமான டாக்டா் தாமு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினாா்.

கல்லூரிப் புல முதன்மையா்கள், முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com